cricket world cup 2011 -espnstar live

Sunday, June 28, 2009

ஒரு நீண்ட இடைவேளைக்கு பின்....!

உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்...

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பதிவில் வந்திருக்கிறேன். வழக்கம்போல் உங்கள் ஆதரவை ( வேறென்ன பின்னூட்டம்தான்) வேண்டி நிற்கும் தமிழ் மாணவன்...

இந்த பதிவில் மாணவனாக இருக்கும் எனக்கு தமிழ் கொடுத்த இலக்கியச்செல்வங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். அது தவிர கவுஜ(கவிதை தமிழ்ச்சொல் இல்லைன்னு சொல்லிட்டாங்கப்பா!) என நான் எண்ணிக்கொண்டிருக்கும் சில தொல்லைகளும் இலவச இணைப்பாக உங்கள் தூக்கத்தை கலைத்து துக்கத்தை கொடுக்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்............

- மாணவன்

Thursday, May 22, 2008

இலண்டன் தமிழ் வானொலி என்றோர் இனிய காற்றலை...

அன்பு உறவுகளே,

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவோடு உங்கள் கணிணித்திரைகளை அடைவதில் மிக்க மகிழ்ச்சி....

பதிவில் நுழைவதற்கு முன் ஒரு நிமிடம்.. இந்த பதிவை வாசிக்கத்துவங்கும் முன் "இலண்டன் தமிழ் வானொலி" யை ஒரு முறை கேட்டு விடுங்களேன்.

முன்னால் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் " Listen to live radio" என்ற இணைப்பு கிடைக்கும். அதில் சொடுக்கினால், உங்கள் கணிணியில் கேட்கும் வகையில் 'TVU Player" என்ற "ஒலி, ஒளி செயலி்" கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள "செயல்படு" என்ற (Play) இடத்தில் சொடுக்கினால் உங்கள் கணிணி, காற்றலைகளை உங்கள் காதுகளில் ஒலிக்கச்செய்யும். இது தொடர்பாக உஙளுக்குள் தோன்றும் ஐயஙகளை கீழ்கண்ட சுட்டியில் சென்று விளங்கிக்கொள்ளுங்கள். tvu player faq. இலண்டன் தமிழ் வானொலி: http://firstaudio.info

சரி..

இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்...

  • நீங்கள் தமிழரா? அல்லது தமிழ்ப்பேசத்தெரிந்தவரா?
  • வானோலி கேட்கும் பழக்கம் உள்ளவரா?
  • எல்லா அலைவரிசைகளிலும், எல்லா நேரங்களிலும் cinema பாடலாக இருக்கிறதே என்று புலம்புபவரா?
  • வாழ்வியல் நிகழ்வுகளையும் உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஊடகத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
  • அரசியலை வெறுக்கிறீர்களா?
  • ஆமாம் sir ஆமாம்.. இப்ப என்ன செய்ய சொல்றீங்கன்னு நீங்க கேட்டால் அதற்கு என் பதில்... ஒரு முறை இலண்டன் தமிழ் வானொலி கேட்டுப்பாருங்களேன்..

    இங்கே திரைப்பாடல்கள் உண்டு, ஆனால் அதை நீங்கள் வேறு எந்த வானொலியிலும் கேட்க முடியாது அல்லது அரிதாக கேட்க கூடிய பாடல்களாக இருக்கும்.

    புலம்பெயர் தேசத்தில் நீங்கள் சந்தித்த ஒரு சிக்கலை பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கும் இந்த காற்றலையில் இடம் உண்டு.

    அடுத்த தலைமுறை தமிழர்களையும் அவர்களின் தமிழ் மொழி ஆளுமைத்திறனையும் மனதிற்கொண்டு இந்த காற்றலை துவங்கப்பட்டதாக இதன் தலைவர் திரு. நடா மோகன் நமக்கு அறியத்தருகிறார்.

    " ஓடி விளையாடு பாப்பா " என்ற நிகழ்ச்சியை இதற்கு காட்டாகக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு தமிழனும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலாம். ஓடி விளையாடு பாப்பாவில், ஒவ்வொரு குழந்தையின் குரலை விட அவரின் எழுத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரலை பதிவு செய்து அனுப்பும் அதே வேளை அதனை எழுத்து வடிவிலும் எழுதி அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. இது உலக ஊடக வரலாற்றில் நான் எங்கும் காணாத தமிழை வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகக்கருதுகிறேன்.

    இந்த வானொலியை காற்றலை என்று அழைக்கவே இதன் தலைவர் விரும்புகிறார். காரணம், வானொலிக்கான எல்லா விதிமுறைகளையும் மீறி தனக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக்கொண்டுள்ளது எனில் அது மிகையல்ல!

    மிக முக்கியமான செய்தி இந்த " காற்றலை" எந்த " இயக்கத்தை"யும் ஆதரிக்காததுதான். புலம்பெயர் தமிழர்களின் வானொலி என்றாலே முதலில் நம் கவனத்தில் வருவது இந்த " இயக்க" சிக்கல்தான். அந்த சிக்கலையும் இந்த காற்றலையில் எளிதில் தவிர்த்துவிட முடிகிறது. ( இது பற்றி விளக்கமாக மற்றொரு பதிவை விரைவில் வெளியிடுகிறேன்)

    உங்கள் படைப்புகளை இந்த காற்றலையில் வெளியாக்கம் செய்யுங்களேன். அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல விரும்பும் ஒவ்வொரு பொருப்புள்ள பெற்றோரும் தங்கள் குழந்தைகளை, அவர்களின் படைப்புகளை, மொழி ஆளுமையை இந்த காற்றலையின் மூலம் வெளியிடலாமே.. இறுதியாக, நீங்களும் இந்த காற்றலையில் கலக்க விருப்பமா?

    இதோ தொடர்பு வழிகள்..

  • தொலைபேசி எண்: +44 208 5869636
  • skype id: londontamilradio
  • தொலைநகல் (fax): +44 208 4711985
  • மின்னஞ்சல் (Email): info@firstaudio.info
  • ஆனால் நாமெல்லாம் தமிழர்களாயிற்றே.. தானும் படுக்க மாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம்..

    இப்போ என்ன செய்யப்போகிறோம்?

    என்றும் மாறா அன்போடு தமிழை விரும்பும்,

    தள்ளிப் படுத்துக்கொண்ட ஒரு தமிழன்.

    நுழைவாயில்…..

    ஒரு நிமிடம்…..

    பதிவிற்க்குள் செல்வதற்கு முன் என்னைப்பற்றி…

    பிறந்தது… வளர்ந்தது…. மூதறிவியல் வரை படித்தது எல்லாமே…..

    மதுரைக்குப் பக்கத்தில் ஒரு குக்கிராமம்…….

    படிப்பு..

    உயிர் தொழில்நுட்பவியல் முனைவர்…..

    மூதறிவியல் தாவரவியல்…

    கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் & நெட்வொர்க்கிங் பட்டயம்…..

    அப்புறம் கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு…